×

ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம், பிப். 4: சாத்தான்குளம் அருகே விஜயனூர்- பண்டாரபுரம் செல்லும் சாலையோரம் உள்ள இசக்கி அம்மன் கோயிலின் பின்பக்கத்தில் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி பதுக்கிவைத்திருந்தனர். இதுகுறித்து தச்சமொழி ஊராட்சி தலைவர் பிரேம்குமார் அளித்த தகவலை அடுத்து சாத்தான்குளம் தாசில்தார் லட்சுமி கணேஷ், ஆர்ஐ மஞ்சரி, விஏஓக்கள் ஜெஸ்பின்மேரி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் 8 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஒழுங்குமுறை விற்பனைகூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

Tags :
× RELATED அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்